×

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மதுரை நாகமலை புதுக்கோட்டை, மகாகணபதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் விவேகா(36). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது காற்றுக்காக முன்பக்க கதவுகளை திறந்து வைத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து, விவேகா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post பெண்ணிடம் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chain ,Rajendran ,Pudukottai, Nagamalai, Madurai ,Viveka ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்...